பாடசாலைகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற அனைத்து பாடசாலைகளையும் திங்கட்கிழமை முதல் வாரத்தில் 5 நாட்கள் நடத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதன்படி, பாடசாலைகள் வழக்கம் போல் காலை 7.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெறும்.

எவ்வாறாயினும் போக்குவரத்துச் சிரமங்களுக்கு உள்ளான ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு உரிய நிவாரணங்களை அதிபர்கள் வழங்க வேண்டிய முறை குறித்து மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள் அதிபர்களுக்கு அறிவிக்கவுள்ளதாக கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

மேலும், எதிர்வரும் மூன்று மாதங்களில் பாடசாலை நேரத்தை பாட கற்பித்தலுக்கு பயன்படுத்துமாறும், பாடசாலை நேரத்திற்கு வெளியில் இணைப்பாடவிதான மற்றும் சாராத செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறும், நிகழ்வுகளை நடத்துவதை  கட்டுப்படுத்துமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.