பிரதமர் பதவியை ஏற்க தயார் – அனுரகுமார திசாநாயக்க

பிரதமர் பதவியை ஏற்க தாம் தயாராகவிருப்பதாகவும், அதற்காக ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும் எனவும் ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர்,

சர்வதேசத்திற்கு மத்தியில் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கு நாம் தயாராக இருக்கிறோம்.

தற்போதைய அரசாங்கம் தொடர்பில் உள்நாட்டிலும் சர்வதேசத்திற்கு மத்தியிலும் நம்பிக்கை இல்லை.

எனவே, தற்போது நம்பிக்கை மிகுந்த நிலையானதொரு ஆட்சிக்கான தேவை தற்போது ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் குறுகிய காலத்தில் நாட்டை மீட்டெடுக்க எம்மால் முடியும்

இதற்காக ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும் என தெரிவித்துள்ளார்.