IPL இறுதிப்போட்டி : குஜராத் டைட்டன்ஸ்-ராஜஸ்தான் றோயல்ஸ் மோதுகின்றன

இந்தியன் ப்றீமியர் லீக் தொடரின் (IPL) இறுதிப் போட்டிக்கு ராஜஸ்தான் றோயல்ஸ் அணி தகுதி பெற்றது.

நாளை ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ள இறுதிப் போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணியுடன், ராஜஸ்தான் றோயல்ஸ் அணி  மோதவுள்ளது.

றோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் அணியுடன் நேற்று வெள்ளிக்கிழமை இரவு  இடம்பெற்ற இரண்டாம் தகுதிகாண் போட்டியில், ராஜஸ்தான் றோயல்ஸ் அணி 7 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய றோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் அணி 20 ஓவர்களில் 8 விக்கட்டுக்களை இழந்து 157 ஓட்டங்களைப் பெற்றது.

இதையடுத்து, 158 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய  ராஜஸ்தான் றோயல்ஸ் அணி, 18.1 ஓவர்களில் 3 விக்கட்டுக்களை இழந்து 161 ஓட்டங்களைப் பெற்று வெற்றியடைந்தது.

2008 ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது ஐ.பி.எல் தொடரில் சாம்பியனான இராஜஸ்தான் றோயல்ஸ் அணி, அதன் பின்னர் இந்த ஆண்டே மீண்டும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.