யாழில் ஹெரோயின் போதைப் பொருளுடன் பிரபல பாடசாலை மாணவன் கைது

-யாழ் நிருபர்-

யாழ். நகர்ப்பகுதியில் ஆபத்தான ஹெரோயின் போதைப் பொருளுடன், பாடசாலை மாணவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளதாக, யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில், நகர் பகுதியில் அமைந்துள்ள ஆண்கள் பாடசாலை மாணவன் ஒருவனே யாழ்ப்பாண பொலிஸாரினால் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளான்.

கைது செய்யப்பட்ட மாணவனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.