பிரதேச செயலாளர்கள் வேலை நிறுத்தம்

இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற மொனராகலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திற்கு பிரதேச செயலாளர் எவரும் கலந்து கொள்ளவில்லை, என அந்த மாவட்டத்தின் பிரதேச செயலாளர்கள் சங்கத்தின் தலைவரும் வெல்லவாய பிரதேச செயலாளருமான சந்தன ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அரசியல் தலையீடு காரணமாக ஒழுக்காற்று விசாரணை நடத்தப்படாமல் படல்கும்புர பிரதேச செயலாளர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அண்மையில், படல்கும்புர பிரதேச செயலாளரை பதவி நீக்குமாறு கோரி, மொனராகலை பொதுப் பேருந்து நிலையத்தின் கூரையில் ஏறி உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் உண்ணாவிரதம் இருந்ததை அடுத்து, பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் படல்கும்புர பிரதேச செயலாளருக்கு இடமாற்றம் வழங்கியுள்ளார். .

இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், இன்றைய மொனராகலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், மாவட்டத்தின் 11 பிரதேச செயலகப் பிரிவுகளின் பிரதேச செயலாளர்கள் இணைந்து கொள்வதில்லை என தீர்மானித்திருந்தனர், என தெரிவிக்கப்படுகின்றது.