போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி நாட்டை விட்டு வெளியேற முயற்சித்த இருவர் கைது

போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி நாட்டை விட்டு வெளியேற முயற்சித்த ஈரான் மற்றும் சோமாலிய பிரஜைகள் இருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை குடிவரவு குடியகழ்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குடிவரவு அதிகாரிகள் இருவரும் பிரான்ஸ் மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளுக்கு செல்ல நாட்டை விட்டு வெளியேற முயற்சித்த போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் வைத்திருந்த கடவுச்சீட்டுகள் போலியானவை என சந்தேகத்தின் பேரில் குடிவரவு அதிகாரிகள் சோதனையிட்டதையடுத்து சந்தேக நபர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.