ஆண்களின் கவனத்திற்கு “பஸ்களில் பெண்களை முறைத்து பார்க்க கூடாது” – அரசின் புதிய விதி

பஸ்களில் பெண்கள் முறைத்து பார்த்தல் உட்பட பல்வேறு தொல்லைகளை தரும் நபர்கள் பஸ்களை விட்டு இறக்கி விட அனுமதி அளித்து தழிழக அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவில் பஸ்களில் பயணத்தின் போது பெண்களுக்கு தொந்தரவு தரும் பயணிகளை பஸ்களில் இருந்து இறக்கிவிடவும், தொடர்ந்து அவர் ஒத்துழைப்பு வழங்கவில்லை எனில் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கவும் , அனுமதி வழங்கி தழிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த அரசாணையில், ” பஸ்களில் பயணிக்கும் பெண்களை ஆண் பயணி முறைத்துப் பார்த்தல், பாலியல் ரீதியாக சைகைகள் காட்டுதல் , கண் சிமிட்டுதல், கூச்சலிடுதல், விசில் அடித்தல், பாடல் பாடுதல், வார்த்தைகளை உச்சரித்தல், புகைப்படங்கள் எடுத்தல் போன்ற சக பெண் பயணிக்கு எரிச்சல் ஏற்படுத்தும் எந்த காரியத்தையும் செய்யக்கூடாது

இவ்வாறான செயல்களில் ஈடுபடுவரை நடத்துநர் எச்சரிக்கை விடுத்த பின்னர் பயணி தொடர்ந்தும் இவ்வாறான செயல்களில் ஈடுபட்டால் வழியில் உள்ள பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கலாம் என புதிய விதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பெண் பயணிகள் வாகனத்தில் ஏறும் போதும் இறங்கும் போது உதவி செய்கிறேன் என்ற போர்வையில் தவறான நோக்கில் நடத்துநர்கள் தொடக்கூடாது. பயணத்தின் நோக்கம் குறித்து பொருத்தமற்ற கேள்விகளை பெண் பயணிகளிடம் நடத்துநர் கேட்கக்கூடாது மற்றும் பெண்கள், சிறுமிகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தும் வகையில் நடத்துநர்கள் நடந்து கொள்ளக் கூடாது எனவும் புதிய விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது போக்குவரத்து வாகனங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் நோக்கில் புதிய விதிகளை அரசு அரசாணையாக வெளியிட்டுள்ளது.