யாழ்.இந்திய உதவித்துணைத்தூதுவர் அலுவலகத்தில் இந்திய சுதந்திர தின நிகழ்வு

-யாழ் நிருபர்-

யாழ். இந்திய உதவித்துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில், இந்தியாவின் 75வது ஆண்டு சுதந்திர தினத்தினை முன்னிட்டு யாழ்.மருதடி வீதியில் உள்ள யாழ்.இந்திய உதவித்துணைத்தூதுவர் அலுவலகத்தில் இந்திய சுதந்திரத்தின கொடியேற்றும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது.

யாழ். இந்திய உதவித்துணைத்தூதரகத்தின் தூதுவர் ஸ்ரீமான் ராகேஸ் நடராஜ் தலைமையில் இந்திய தேசிய கொடியேற்றி ஏற்றி வைக்கப்பட்டதுடன், இந்தியாவின் குடியரசு ஜனாதிபதியின் வாழ்த்துசெய்தியும் வாசிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்தும் சிறப்புரையும் இந்திய இராணுவ வீரர்களின் தேசப்பற்றுப்பாடல்களும் இடம்பெற்றன.

இங்கு இந்திய தூதரகத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் அலுவலகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.