நாட்டை வந்தடையவுள்ள கச்சா எண்ணெய் ஏற்றிய கப்பல்கள்

100,000 மெற்றிக் தொன் கச்சா எண்ணெயை ஏற்றிக்கொண்டு கப்பல் ஒன்று இன்று சனிக்கிழமை இரவு கொழும்பு வந்தடையும் என்றும், அதன் மாதிரிகள் நாளை ஞாயிற்றுக்கிழமை எடுக்கப்படும் என்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

120,000 மெட்ரிக் டன் கச்சா எண்ணெய்யின் 2வது தொகுதி ஆகஸ்ட் 23 முதல் 29 வரையான காலப்பகுதிக்குள் வரவுள்ளதாக அவர் தெரிவித்தார்.