சீனக் கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் பிரவேசிக்க அனுமதி?

சீனக் கப்பலான “யுவான் வான் 5” ஆகஸ்ட் 16 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்க வெளிவிவகார அமைச்சு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனாவின் சர்ச்சைக்குரிய விண்வெளிக் கண்காணிப்புக் கப்பல் “யுவான் வாங் 5” இந்தியப் பெருங்கடல் வழியாக இலங்கையை நோக்கி வந்து கொண்டிருக்கின்றது

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்த அனுமதி கிடைக்கும் வரை சீனக் கப்பல் சுமார் 12 கடல் மைல் தொலைவில் தங்கியிருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், சீனக் கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் நுழைவதற்கு இலங்கை துறைமுக அதிகாரசபையிடம் அனுமதி பெறவில்லை.