எரிபொருள் பவுசர் வீதியை விட்டு விலகி விபத்து

களனி மேம்பாலத்தில் எரிபொருள் பவுசர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து இன்று சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

எரிபொருள் ஏற்றப்பட்ட பௌசர் மேம்பாலத்தில் பயணித்த போது வீதியை விட்டு விலகி கீழே வீதியில் விழுந்துள்ளது.

சாரதி தூங்கியமையால் இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பேலியகொட பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்துக்குப் பிறகு விபத்து பவுசரில் இருந்த எரிபொருள் வேறு ஒரு பவுசருக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் சாரதி காயமடைந்து சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பேலியகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.