தொலைபேசி விற்பனை நிலைய உரிமையாளர் மீது வாள்வெட்டு தாக்குதல்

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் தொலைபேசி விற்பனை நிலையம் நடாத்தும் உரிமையாளர் மீது நேற்று வெள்ளிக்கிழமை இரவு வாள் வெட்டுத்தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

தொல்புரம் மேற்கு – சுழிபுரம் பகுதியை சேர்ந்த 34 வயதுடையவர் மீதே வாள் வெட்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த நபர் காங்கேசன்துறை வீதி ஊடாக வீடு நோக்கி சென்று கொண்டிருந்த போது, மனோகரா திரையரங்குக்கு அருகில் வைத்து வாள் வெட்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ஆரம்ப விசாரணைகளின் அடிப்படையில், முன்பகை காரணமாகவே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.