ஒரே நாளில் 16,299 பேருக்கு கொவிட் தொற்று : மீண்டும் முகக்கவசம் கட்டாயம்

இந்தியாவில் மீண்டும் கொவிட் தொற்று வேகமாக பரவி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலைமையை கருத்தில் கொண்டு, இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியில் மீண்டும் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு அணியாதவர்களுக்கு 500 இந்திய ரூபா அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்படடுள்ளது.

இந்தியாவில் நேற்று வியாழக்கிழமை மாத்திரம் 16,299 பேர் கொவிட் தொற்றுக்கு ஆளாகியுள்ளதாக இந்திய செய்திகள் மேலும் தெரிவித்துள்ளன.