க.பொ.த உயர்தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான புதிய அறிவித்தல்

2022 க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான பாடசாலை வருகைத் தேவையை கல்வி அமைச்சு திருத்தியுள்ளது.

அதன்படி, 2022ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களில் 80% வருகைப் பதிவு கவனத்தில் கொள்ளப்படமாட்டாதென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள பாடசாலை மாணவர்களுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் திகதியில், 80% பாடசாலை நாட்களில் வருகைப் பதிவு செய்யப்பட வேண்டும் என கல்வி அமைச்சு சுற்றறிக்கை மூலம் தெரிவித்திருந்தது.

எனினும் கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட கொரோனா, எரிபொருள் நெருக்கடி காரணமாக  போக்குவரத்து சிரமம்  காரணமாக,   டிசம்பர் 2022 இல் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் 80% வருகையை கருத்தில் கொள்ள வேண்டாம் என அதிபர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.