அருட்தந்தை ஜீவந்த பீரிஸுக்கு பிணை

‘கோட்டா கோ கம’ முக்கிய ஆர்வலர் அருட்தந்தை ஜீவந்த பீரிஸுக்கு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.

அருட்தந்தை ஜீவந்த பீரிஸுக்கு 5 இலட்சம் ரூபா பெறுமதியான 2 சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும், அவருக்கு முன்னர் விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடையை கோட்டை நீதவான் நீதிமன்றம் நீடித்துள்ளது.

கடந்த ஜூலை 25ஆம் திகதி, அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களில் முக்கிய பங்கு வகித்த அருட்தந்தை ஜீவந்த பீரிஸுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பயணத்தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சந்தேகநபரான அருட்தந்தை ஜீவந்த பீரிஸை, விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு மத்திய குற்றவியல் விசாரணைப் பிரிவினரால் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நீதிமன்ற விசாரணையின் போது கோரப்பட்டது.

குறித்த கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம், அவருக்கு பிணை வழங்கி உத்தரவிட்டது.