வாட்ஸ் அப் மூலம் மாணவர்கள் பாலியல் துஷ்பிரயோகம் : 44 வயதுடைய சந்தேக நபர் கைது

காலி பிரதேசத்தில் பல பாடசாலை மாணவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேகநபர் ஒருவரை குற்றப்புலனாய்வு திணைக்களம் கைது செய்துள்ளது.

காலி பிரதேசத்தில் உள்ள பல பாடசாலைகளில் கல்வி கற்கும் பிள்ளைகளின் பெற்றோர்கள் தமது பிள்ளைகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பாலியல் வெறி பிடித்த நபர் ஒருவர் தொடர்பான, தகவல் ஒன்றின் அடிப்படையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக உனவடுன பிரதேசத்தில் வசிக்கும் 44 வயதுடைய ஒருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

இவர் வாட்ஸ் அப் மூலம் மாணவர்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்துள்ளமை தெரியவந்ததுள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சிறுவர்கள் பல்வேறு இடங்களில் இந்த குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர், பிரபல ஆலயம் ஒன்றை நடத்தி வரும் பூசாரி என்ற போர்வையில் மாணவர்களை ஈர்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காலி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட இவரை எதிர்வரும் ஆகஸ்ட் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.