ரஞ்சன் ராமநாயக்க இரண்டு நாட்களுக்குள் முடிவு எடுப்பார் ?

நீதிமன்றத்தை அவமதித்தமைக்காக மன்னிப்புக் கோருவது குறித்து தீர்மானிப்பதற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தனது சட்டத்தரணிகளுடன் கலந்துரையாடி வருவதாக அவரது சட்ட ஆலோசகர் ஒருவர் இன்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

ராமநாயக்க இரண்டு நாட்களில் இறுதி முடிவை எடுப்பார் என்றும் ஆலோசகர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தை அவமதித்ததற்காக நீதித்துறையிடம் எழுத்துமூல மன்னிப்புக் கோரினால் ராமநாயக்க விடுதலை செய்யப்படுவார் என , நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ நேற்று புதன்கிழமை தெரிவித்தார்.

வாரயிறுதியில் மன்னிப்புக் கேட்டால், அடுத்த வாரம் ராமநாயக்க மன்னிக்கப்பட்டு விடுவிக்கப்படுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.