காணாமல் போன சிறுமி காட்டுப்பகுதியில் இருந்து மீட்பு

பதுளை- லுணுகலை 27 ம் கட்டைப் பகுதியில் காணாமல் போன 14 வயது சிறுமி மிட்கப்பட்டுள்ளார்.

லுணுகலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட 27 ம் கட்டைப் பகுதியில் 14 வயது சிறுமி கடந்த 3 ம் திகதி முதல் காணாமல் போனதாக அவரது பெற்றோரினால் லுணுகலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

லுணுகலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில் பல்லேகிருவ பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞர் ஒருவரும் 58 வயதுடைய லுணுகலைப் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரும் மூவரும் உடகிருவ கொட்டிகல்கே காட்டுப் பகுதியில் தலைமறைவாகி இருப்பதாக பொலிஸாருக்கு பொதுமக்களால் வழங்கப்பட்ட தகவலை அடுத்து இன்று காலை விஷேட அதிரடி படையினர் மற்றும் லுணுகலை பொலிஸார் இனைந்து உடகிருவ காட்டுப்பகுதியில் தேடுதலை மேற்கொண்ட போது குறித்த மூவரும் கற்குகை ஒன்றினுள் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்‌.

மேலதிக விசாரணைகளை லுணுகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

– பதுளை நிருபர்