எட்டு அதிஷ்ட மஹாலக்சுமிகளின் ஐஸ்வர்யங்களை அள்ளி தரும் வரலட்சுமி விரத உற்சவம்

-யாழ் நிருபர்-

எட்டு அதிஷ்ட மஹாலக்சுமிகளின் ஐஸ்வர்யங்களை அள்ளி தரும் வரலட்சுமி விரத உற்சவம் யாழ்.மாவட்டத்தில் உள்ள ஆலயங்களில் மிக சிறப்பாக இடம்பெற்றது.

அந்தவகையில் வரலாற்றுச்சிறப்பு மிக்க யாழ்.வண்ணையம்பதி ஸ்ரீ வெங்கடவரதராஜப்பெருமாள் ஆலயத்தில் ஸ்ரீ வரலட்சுமி உற்சவம் இன்று காலை சிறப்பாக இடம்பெற்றது.

கருவறையில் வீற்றிருக்கும் ஸ்ரீ வேங்கட வரதராஜப்பெருமாள் மற்றும் சீதேவி, பூமாதேவி, மஹாலட்சுமி ஆகிய தெய்வங்களுக்கு விசேட அபிசேங்கள் ஆராதனைகள் என்பன இடம்பெற்று.

மஹாலட்சுமி செந்தாமரை பீடத்தில் வீற்று உள்வீதியுடாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இவ் உற்சவ கிரியைகளை ஆலயபிரதம குரு பிரம்ம ஸ்ரீ செ.ரமணீஸ்வரக்குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் நடாத்தி வைத்தனர்.

பின்னர் வரமஹாலட்சுமி நூல்காப்பும் பக்தர்களுக்கு சிவாச்சாரியார்கள் வழங்கிவைத்தனர்.

வரமஹாலட்சுமி விரத உற்சவத்தில் பெருந்திராளான பக்தர்கள் கலந்து கொண்டு இஷ்ட சித்திகளை பெற்றுச் சென்றனர்.