மனைவியின் தலையில் கட்டையால் அடித்த கணவன்

பெண் ஒருவர் தனது கணவன் சேமித்து வைத்த பெற்றோலை, அலுவலக அதிகாரிக்கு கொடுத்தமையால் கணவரின் தாக்குதலுக்கு இலக்காகி மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் யாழ் வலிகாமம் பகுதியில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.

இரவு பகலாக நீண்ட வரிசையில் காத்திருந்து கணவர் 05 லீற்றர் பெற்றோலினை வாங்கி வீட்டில் சேமித்து வைத்துள்ளார்.

இந்நிலையில் மனைவி தன்னுடன் பணி புரியும் அதிகாரிக்கு சேமித்து வைத்திருந்த பெற்றோலினை வழங்கியுள்ளார்

இதனையடுத்து கணவர் வீட்டில் வந்து பார்க்கையில் 10 நாட்களாக சேமித்த வத்திருந்த பெற்றோலை காணவில்லை என அதிர்ச்சியடைந்துள்ளார்.

இது தொடர்பில் மனைவியிடம் விசாரித்த வேளை மனைவி நடந்ததை தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த கணவர் மனைவியின் தலையில் கட்டையால் தாக்கியுள்ளார்.

இதனையடுத்து அயலவர்கள் மனைவியை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.