ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் 250 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் ரிக்டர் அளவுக்கோலில் 6.1 மெக்னிடீயூடாக பதிவாகியுள்ள  சக்திவாய்ந்த நில அதிர்வின் காரணமாக, சுமார் 250 பேர் வரை உயிரிழந்துள்ளதுடன் 150 பேருக்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள கோஸ்ட் நகரிலிருந்து சுமார் 44 கிலோமீற்றர் தொலைவில் 51 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நில அதிர்வு ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அத்துடன், இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடுமென தெரிவிக்கப்படுகிறது.