வீதி விபத்துக்களில் 5 பலி 11 பேர் படுகாயம்

நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் , மேலும் 11 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

வவுனியா, யாழ்ப்பாணம், கவரக்குளம், இரத்தினபுரி மற்றும் குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவுகளில் இந்த விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.

வவுனியா – யாழ்ப்பாணம் வீதியில் தாண்டிக்குளம் பகுதியில் எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மீது லொறி மோதியதில் 26 வயதுடைய மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழந்துள்ளார்.

மேலும், குளியாப்பிட்டிய தண்டகமுவ பகுதியில் லொறியை முந்திச் சென்ற மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் மீது வேன் மோதியதில் அவர் குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

வவுனியா கவரக்குளம் கல்குளம் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த பஸ்ஸ{டன் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் வேன் மோதி விபத்துக்குள்ளானதில் வேனில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 9 பேர் காயமடைந்துள்ளனர்.

இரத்தினபுரி மற்றும் குளியாப்பிட்டிய பிரதேசங்களிலும் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.