ரஷ்ய பயணிகள் விமானம் கட்டுநாயக்கவில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது ?

ரஷ்யாவுக்குத் திரும்ப இருந்த விமானத்தை கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் இடைநிறுத்தி பிறப்பித்த உத்தரவை அடுத்து இன்று வியாழக்கிழமை நண்பகல் முதல் ரஷ்ய ஏரோஃப்ளோட் விமானம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய விமானம் ளுரு-288 இன்று காலை 10.10 மணியளவில் ரஷ்யாவின் மொஸ்கோவில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

இந்த விமானம் மீண்டும் இன்று மதியம் 12.50 மணிக்கு மீண்டும் மாஸ்கோவிற்கு புறப்பட இருந்தது. இந்த விமானத்தில் புறப்பட்டுச் செல்வதற்காக 200க்கும் மேற்பட்ட பயணிகள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இதேவேளை, கட்டுநாயக்க விமான நிலைய பிரிவின் தலைவருக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து குறித்த விமானம் புறப்படுவதற்கு தடை விதித்து கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதையடுத்து விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், விமானத்திற்கு வரும் பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தை சுற்றியுள்ள சுற்றுலா விடுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அயர்லாந்தில் உள்ள செலஸ்டியல் ஏவியேஷன் டிரேடிங் லிமிடெட் தாக்கல் செய்த முறைப்பாட்டினை விசாரித்த கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்ற நீதிபதி ஹர்ஷ சேதுங்க, பிரதிவாதியான ரஷ்ய விமான சேவைக்கு இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளதுடன், இந்த தடை உத்தரவு ஜூன் 16 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும்.

பிரதிவாதியான ரஷியன் ஏர்லைன்சுடன் சமரச வழக்கு இருப்பதாகவும், எனவே, இலங்கையிலிருந்து வெளியேறுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான விமானத்தை தடை செய்யுமாறு கோரி முறைப்பாடு செய்துள்ளதாகவும் மனுதாரர் தெரிவித்துள்ளார்.

குறித்த முறைப்பாட்டினை பரிசீலித்த கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்ற நீதிபதியினால் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் விமானப் படைத் தலைவர், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பில் தற்போது பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக கட்டுநாயக்க விமான நிலைய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.