பண்டாரகம – அட்டலுகம பகுதியில் காணாமல்போன 9 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்த சிறுமியின் சடலம் அவரது வீட்டுக்கு அருகில் உள்ள சதுப்பு நிலம் ஒன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
பண்டாரகம, அட்டுலுகம பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த சிறுமி நேற்று வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் தனது வீட்டிலிருந்து சுமார் 200 மீற்றர் தொலைவிலுள்ள கடையொன்றுக்கு கோழி இறைச்சி வாங்குவதற்காக சென்ற நிலையில், மீண்டும் வீடு திரும்பவில்லை.
சிறுமி காணாமல் போன சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது
இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளையடுத்தே இவ்வாறு குறித்த சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.