-பதுளை நிருபர்-
பசறை எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் அமைந்துள்ள எரிவாயு விற்பனை நிலையத்திற்கு, 23 நாட்க்களுக்கு பின்னர் இன்று திங்கட்கிழமை எரிவாயு கொள்கலனை ஏற்றிய லொறி ஒன்று வருகை தந்ததை தொடர்ந்து, எரிவாயு விநியோகஸ்தர்களினால் எரிவாயு கொள்கலன்கள் விநியோகிக்கப்பட்டது.
இன்று அதிகாலை சுமார் 3 மணியிலிருந்து எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு முன்பாக சுமார் 200 ற்கும் மேற்பட்ட மக்கள் எரிவாயு கொள்கலன்களை பெற்று கொள்வதற்காக காத்திருந்தனர்.
இருப்பினும் அங்கிருந்த 75 நபர்களுக்கே எரிவாயு கொள்கலன்கள் வழங்கப்பட்டதாகவும், தம்மால் 75 கொள்கலன்களே பகிர்ந்தளிக்க முடியும் என்றும், விற்பனை நிலைய முகாமையாளர் தெரிவித்தார்.
இதன்போது, 75 நபர்களுக்கே எரிவாயு கொள்கலன்கள் பகிர்ந்தளிக்கப்பட்டதோடு, காத்திருந்த மக்கள் எரிவாயுவை பெற்றுக் கொள்ளாமல், ஏமாற்றத்துடன் திரும்பி சென்றதை காணக்கூடியதாக இருந்தது.
பொலிஸார் மற்றும் படையினரின் பாதுகாப்புடனேயே எரிவாயு கொள்கலன்கள் விநியோகிக்கப்பட்டன.