மட்டு.முதலைக்குடாவில் வறுமை நிலையில் வாழும் குடும்பமொன்றிற்கு வீடு கையளிப்பு

-வாழைச்சேனை நிருபர்-

மட்டக்களப்பு முதலைக்குடா கிராமசேவகர் பிரிவில் வறுமை நிலையில் வாழ்ந்து வரும் குடும்பமொன்றிக்கான 34 ஆவது சக்தி இல்லம் மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர் பீடத்தினால் வைபவ ரீதியாக கையளிக்கப்பட்டது.

பாடசாலை வீதி முதலைக்குடா மேற்கினைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான வி.விதுசா என்பவரது நலன் கருதி இவ் மனித நேய உதவி வழங்கப்பட்டுள்ளது.

2 பெண் பிள்ளைகளுடன் அடிப்படை வசதியற்ற குடிசை வீட்டில் வாழ்ந்து வந்த இவர்கள் மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர்பீடம் கல்வி சமூகநலம் பண்பாடு அறப்பணிமையம் சுவிஸ் மட்டக்களப்பு கிளை ஊடாக விடுத்த வேண்டுகோளினையடுத்து இவ்வுதவி வழங்கி வைக்கப்பட்டது.

நிதி அனுசரனைணயை அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த மாசிலாமணி ரவி வழங்கி வைத்தார்.

மேற்படி அமைப்பானது மாவட்டத்தில் பல்வேறுபட்ட மனிதநேய உதவிகளை மேற்கொண்டு வருகின்றது.

34 ஆவது சக்தி இல்லம் கையளிப்பு நிகழ்வில் மேற்படி அமைப்பின் ஸ்தாபகர் சுவிஸ் சுரேஸ் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பாளர் பா.வினோராஜ் அவருடன் இணைந்த சக்தி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.