மாணவியை ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுத்திய சகோதரிகள் கைது

பாடசாலை மாணவியை ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுமாறு பாலியல் தொல்லை கொடுத்து வந்த உறவு முறையான சகோதரிகள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.

சென்னை – மதுரை மாவட்டம் மேலூர் அருகே கரையப்பட்டியை சேர்ந்த உறவு முறையான இவர்கள் இருவரும் மேலூரில் உள்ள துணிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வரும்நிலையில், துணிக்கடை அருகே குடியிருக்கும் 17 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுமாறு தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர் மேலூர் அனைத்து மகளிர் பொலி நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதையடுத்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த சகிதாபேகம் மற்றும் அவரது சகோதரி வகிதா பானு ஆகிய இருவர் மீதும் போக்சோ மற்றும் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துடன், இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையின் போது சகிதா பேகத்தின் கையடக்க தொலைபேசியில் சிறுமியுடன் திருமணம் செய்துகொண்ட புகைப்பட காட்சிகள் மற்றும் சிறுமியுடன் அந்தரங்கமாக இருக்கும் புகைப்படகாட்சிகள் இருந்ததுள்ளமை தெரியவந்துள்ளது.

சிறுமியை இவர் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுத்தி, குழந்தைத் திருமணம் செய்துள்ளதும் தெரியவந்துள்ளது. மேலும் இதற்கு உடந்தையாக இருந்த அவரது சகோதரி வகிதாபானுவையும் தற்போது போக்சோ மற்றும் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சிறுமியின் வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன் தங்க நகைகள் திருட்டுப் போயுள்ள நிலையில், இதுதொடர்பான விசாரணையில் , நகையை சிறுமி எடுத்து சகிதா பேகத்திடம் கொடுத்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேலுர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.